ராகம் : சஹானா தாளம் : ஆதி
பல்லவி
தாயே நினை நான் சரணடைந்தேன் - தெய்வ
நாயகியே, அம்மையே, உமையே எந்தன் தாயே,
அனுபல்லவி
நாயேன் நற்றமிழினில் நல்ல துதி செய்வதெல்லாம்.....
நோயில் கிடவாமல் ஓர் நொடிக்குள் முடிய வேண்டும் - (தாயே)
சரணம்
ஓயா ஒழிவில்லா அவலத்தில் ஆழ்த்தியென்னை,
பேயாய் அலைக்கழித்த பெருந்துன்பம் போதுமம்மா...
மாயாப் பிறவியின் மயக்கத்தை களைந்தெடுக்க..
சேயாய் கதறுகின்றேன்,செவி மடுத்துக் கேளுமம்மா....
---- (தாயே)
.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உணர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”
Wednesday, October 27, 2010
Monday, October 25, 2010
முதல் வணக்கம்
வினாயகர் துதி
ராகம் : நாட்டை தாளம் : ஆதி
பல்லவி
அனாதி நாள் முதல் அனைவரும் போற்றும்
கணாதிபதயே கஜமுகனே....
( அனாதி)
அனுபல்லவி
குணா நிதியே குவலயம் காப்பாய்....
தனாதிபதயே தயை புரிவாய்....
(அனாதி)
சரணம்
அனாத ரட்சகா .... ஆபத் பாந்தவா...
வினாச கால வினை தீர்ப்பாய், அங்கெங்
கெணாத படி எங்கும் இருக்கும்...
வினாயகனடி பணிந்திடுவோம்.
(அனாதி)
ராகம் : நாட்டை தாளம் : ஆதி
பல்லவி
அனாதி நாள் முதல் அனைவரும் போற்றும்
கணாதிபதயே கஜமுகனே....
( அனாதி)
அனுபல்லவி
குணா நிதியே குவலயம் காப்பாய்....
தனாதிபதயே தயை புரிவாய்....
(அனாதி)
சரணம்
அனாத ரட்சகா .... ஆபத் பாந்தவா...
வினாச கால வினை தீர்ப்பாய், அங்கெங்
கெணாத படி எங்கும் இருக்கும்...
வினாயகனடி பணிந்திடுவோம்.
(அனாதி)
Subscribe to:
Posts (Atom)