Thursday, December 23, 2010

சுபபந்துவராளியில் ஒரு கீர்த்தனை!


ராகம்: சுபபந்துவராளி தாளம்: ஆதி

பல்லவி

ஏன் இந்த மெளனம் ஸ்வாமி - ஏழை
எந்தனுக்கு அனுக்ரஹம் புரிய இன்னும்
--ஏன்
அனுபல்லவி
பாவி நான் பட்ட துன்பம் போதுமிந்த நானிலத்தில்
ஆவி அடங்குமின்னே ஆட்கொள்ள வேண்டுமையா..
-- ஏன்
சரணம்
ஏய்த்துப் பிழைக்குமிந்த மானிடரின் மத்தியிலே,
அன்புடன் அரவணைத்து ஆதரிக்க ஆருமில்லை..
அர்த்தமில்லா வாழ்க்கை வாழ்ந்தினிப் பயனில்லை,
ஆண்டவனே உனையன்றி உற்ற துணை யாருமில்லை
-- ஏன்

Saturday, December 11, 2010

விஷ்ணு துதி!


(இன்று ஸ்ரீரங்கத்தில் ஐந்தாம் நாள் பகல் பத்தாக்கும். அரங்கனை காணத்தான்
வாருங்களேன்)

ராகம் : சாரங்கா தாளம் : ஆதி

பல்லவி

அரங்கனைக் காண வாருங்கள்...
அற்புத தரிசனம் பாருங்கள்....
..அர
அனுபல்லவி

அள்ளிக் கொள்ளும் அழகில்,
அகண்ட காவிரியில்....
பள்ளி கொண்டான்
பெருமாள்....பாருங்கள்..
..அர
சரணம்

அலைகடல் ஓரம் அணங்கினை மீட்க,
அயர்ந்தது தர்ப்ப சயனத்திலோ?
தளை தனில் இருந்து பக்தனைக் காக்க,
சாய்ந்தது சர்ப்ப சயனத்திலோ? ..அர