Monday, June 13, 2011

குரு நாதர் துணை!!!


பாடல் புனைந்த இடம் : கர்ப்பகிருஹம் குருநாதர் ஸ்வயம்ப்ரஹாஸ ஸ்வாமிகள் ஸன்னிதி
பாடல் புனைந்த நேரம் : காலை பத்து மணி முதல் பத்தரை வரை..
பாடல் புனைந்த நாள் : 17.12.1998 வியாழக் கிழமை.

[ஐம்பதாவது குரு நாதர் ஆராதனை. அறுபது வருடங்களுக்கு ஒரு முறை தான் வியாழனன்று (குரு வாரம்) ஆராதனை வரும்..17.12.1998 வியாழன்று ஆராதனை வெகு விமர்சையாக நடந்தது.என் மாமனார் ஆதிகுடி கிளப் ராமகிருஷ்ண ஐயர்..அவருக்குப் பின் என் மைத்துனர் ஸத்ய வாகீஸ்வரன் & பிரதர்ஸ் அந்த அவதூதருடைய பக்தர்கள்..மைத்துனர் ஸத்யவாகீஸ்வரனுடன் அந்த வியாழனன்று நடந்த ஆராதனைக்கு சென்றிருந்தேன்.அப்போது ஏதோ தோன்ற,இதை எழுதி, அன்னணம் புனையப் பட்ட பாடல் குரு சன்னிதானத்தில் தத்தாத்ரேயர் சன்னிதியில் வைக்கப் பட்டது..ஆராதனை நடந்த இடம், நாமக்கல் சேந்த மங்கலம்..இந்த அவதூதர் புதுக் கோட்டை ஜட்ஜ் ஸ்வாமிகளின் குரு என்று கேள்வி! பாடலைப் பார்ப்போமா?]
ராகம் : ரேவதி தாளம் : ஆதி


பல்லவி
அபயம் அளிப்பாய் நிர்குண வாஸா..
சுந்தர ரூபா..ஸ்வயம்ப்ரஹாஸா...
.......(அபயம்)
அனுபல்லவி
சமய சஞ்சீவி சத்குரு நாதா....
உமையொரு பாகனின் ப்ரிய அவதூதா
.......(அபயம்)
சரணம்
அவயம் அடங்கி அருள்தனை பெறவே..
உபாயம் ஒன்றை உணர்த்திடு குருவே...
.......(அபயம்)