Saturday, October 15, 2011

ஆனைக்கா...


(1.1.2000 அன்று கோவை வடவள்ளி ஸ்வாமிஜி செளரிராஜன் அவர்கள் பிறந்த நாள்.அது நடந்த திருமண மண்டபத்தில்(பழைய பக்‌ஷிராஜா ஸ்டுடியோ) புனையப் பட்ட பாடல் இது. அவர்கள் அகிலாண்டேஸ்வரி தேவி உபாசகர். எங்களுக்கெல்லாம் லலிதா திரிசதி சொல்லிக் கொடுத்தவர்)

ராகம் : அடாணா
தாளம் : ஆதி

பல்லவி
ஆனைக்காவிலுறை அகிலாண்டேஸ்வரியை
அனுதினமும் பாட அனுக்ரகம் தர வேண்டும்....
(ஆனை..
அனுபல்லவி
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக,
பாடும் பாக்களுக்கு இதுவே முதலாக.....
(ஆனை..
சரணம்
தேனை சுவைக்கும் இன்பத்தினை, பார்க்கும்
பார்வையில் அருளும் பராசக்தி தாயே-தரன்,
ஊணிலும்,உயிரிலும் உணர்வென நீ கலந்து,
உத்தமனாய் வாழ்ந்து உயர்ந்திட வரம் வேண்டும்.
(ஆனை..