
ராகம் : கானமூர்த்தே தாளம் : ஆதி
பல்லவி
தாயாய் எழுந்த தயாபரனே...
(தாயாய்...
அனுபல்லவி
மாயாப் பிறவி பிணிக்கு - அரு
மருந்தாய் அமைந்த மஹா தேவா
(தாயாய்....
சரணம்
ஜகத்தில் பிறவி போதும் என
மகப்பேறு பார்த்த மாயக் கூத்தனை
கேட்பது முறையாகுமோ...அம்மா,அது
நகைப்பிற்கு இடம் ஆகுமோ?
(தாயாய்...