
( திருச்சி கருமண்டபம் அருகில் காலகண்டேஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த கோவில் பராமரிப்பு..பூஜை ..எல்லாவற்றையும் ரயில்வேயில் பணி ஓய்வு பெற்ற அன்பர் ஒருவர் (HE IS A COST ACCOUNTANT) வெகு ஸ்ரத்தையாய் செய்வார்.அந்த வயதிலும் அவர் இறையனாருக்கு பலம்,
தலம்,புஷ்பம் போல நாதானுபாசனையும் செய்ய வேண்டும் என்கிற அவாவில் ஃப்ளூட் கற்றுக் கொண்டார் என்பது கூடுதல் செய்தி)
ராகம் : ரீத கெளளை தாளம் : ஆதி
பல்லவி
பாரா முகம் ஏனய்யா.....பகதனிடம்
.....பாரா
அனுபல்லவி
தீராத வினை யாவும் தீர்ப்பவனே தீந்தமிழால்,
நின்னை நான் பாட வந்தேன்......
......பாரா
சரணம்
உருகாமல் பஜிப்பவருக்கு கருங்கல்லாக நிற்பவனே,
கசிந்துன்னை வேண்டுகிறோம், காலகண்டா காத்தருள்வாய்...
......பாரா
'உருகாமல் பூசிப்பவர்க்கு கருங்கல்' - interesting.
ReplyDeleteகோவிலில் பராமரிக்கும் அன்பர் குழல் கற்றுக்கொண்ட காரணம் இதயத்தைத் தொடுகிறது.
குழலிசை உள்ளம் கொள்ளை கொள்கிறது.
ReplyDeleteரீதி கௌளை ஓர் அருமையான ராகம்... அதில் அமைந்திருக்கும் உங்கள் கீர்த்தனை அபாரம்..சார்..
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎன் தளத்துக்கு வருகை தாருங்கள் சார்.
நானும் சிவாஞ்சலி செலுத்தியிருக்கிறேன்.