.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உணர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”
Tuesday, February 1, 2011
காலகண்டர் துதி!!
( திருச்சி கருமண்டபம் அருகில் காலகண்டேஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த கோவில் பராமரிப்பு..பூஜை ..எல்லாவற்றையும் ரயில்வேயில் பணி ஓய்வு பெற்ற அன்பர் ஒருவர் (HE IS A COST ACCOUNTANT) வெகு ஸ்ரத்தையாய் செய்வார்.அந்த வயதிலும் அவர் இறையனாருக்கு பலம்,
தலம்,புஷ்பம் போல நாதானுபாசனையும் செய்ய வேண்டும் என்கிற அவாவில் ஃப்ளூட் கற்றுக் கொண்டார் என்பது கூடுதல் செய்தி)
ராகம் : ரீத கெளளை தாளம் : ஆதி
பல்லவி
பாரா முகம் ஏனய்யா.....பகதனிடம்
.....பாரா
அனுபல்லவி
தீராத வினை யாவும் தீர்ப்பவனே தீந்தமிழால்,
நின்னை நான் பாட வந்தேன்......
......பாரா
சரணம்
உருகாமல் பஜிப்பவருக்கு கருங்கல்லாக நிற்பவனே,
கசிந்துன்னை வேண்டுகிறோம், காலகண்டா காத்தருள்வாய்...
......பாரா
Subscribe to:
Post Comments (Atom)
'உருகாமல் பூசிப்பவர்க்கு கருங்கல்' - interesting.
ReplyDeleteகோவிலில் பராமரிக்கும் அன்பர் குழல் கற்றுக்கொண்ட காரணம் இதயத்தைத் தொடுகிறது.
குழலிசை உள்ளம் கொள்ளை கொள்கிறது.
ReplyDeleteரீதி கௌளை ஓர் அருமையான ராகம்... அதில் அமைந்திருக்கும் உங்கள் கீர்த்தனை அபாரம்..சார்..
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஎன் தளத்துக்கு வருகை தாருங்கள் சார்.
நானும் சிவாஞ்சலி செலுத்தியிருக்கிறேன்.