Wednesday, April 20, 2011

மனோன்மணியம் துதி

இந்த பாடல் புனையப் பட்ட நாள் 13.11.1998 நேரம் காலை 10.20 மணி. நண்பர் ஒருவர் நான் ஏதோ இந்த மாதிரி எழுதுவதைப் பார்த்து சொன்னார்: " அப்பா, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவிலில் மனோன்மணியம் என்று ஒரு தெய்வம் இருக்கிறது. அவளிடம் நீ மனமுருகி வேண்டினால், கருத்தாழம் மிக்க பாடல்களை நீ புனைய அருள் புரிவாள்" என்று கூற, அடுத்த நாளே எழுதிய பாடல் இது! இதன் பிறகு மதுரை கோவிலுக்கு பல தடவை சென்றுள்ளேன். இருந்தும் அந்த அம்மன் இருக்கும் இடம், நான் கேட்ட யாருக்கும் தெரியவில்லை.. ஆகவே, மதுரை அன்பர்கள் இந்த விஷயத்தில் உதவி, இந்த அந்தகனின் அகக் கண்ணினை திறந்தால், மிக்க நன்றி உடையவனாய் இருப்பேன்...)

ராகம் : சுபபந்துவராளி தாளம் : ஆதி

பல்லவி

மதுரையில் உறைந்திடும் மனோன்மணியமே
மனதினில் இறைமையை ஊட்டிடுவாய்-தேவி

அனுபல்லவி

வாக்கிலே வளமையும்,புலமையும்வர வேண்டும்
நோக்கிலே எண்ணங்கள் உயர்ந்திடல்வேண்டும்

சரணம்

பாக்களில் நின்னை அர்ச்சிக்கும் வரம் வேண்டும்
என் நாவினில்நின் பதம்நர்த்தனமிடல்வேண்டும்
ஏக்கம் என்னுள் மறைந்திட வேண்டும்,
நீக்கமற நீ நின்றிடல் வேண்டும்.......

--- சுபம் -----

Friday, April 1, 2011

விருத்தம்...ராகம் : சாமா...


(இந்த பாடல் புனைந்து சரியாக பன்னிரெண்டு வருடம் கழித்துத் தான், பழமுதிர்சோலை யை அடியேன் காண நேர்ந்தது.அப்போது லேசாய மழைத் தூறிட என்னுள் பீறிட்டது, ஆனந்தம்
இப்போது அப்பாடலை பார்க்கையில் அதனினும் ஆனந்தம்..அந்த ஆனந்தம் நம் அன்பர்கள் பகிர்விற்கு!)


விருத்தம்


செவ்விள நீர் குலை காய்த்துக் குலுங்கிட,
மேவிய பூங்காற்று மேனி தழுவிட...
கவ்விய கனிகளை மந்திகள் சிந்திட,
செய்யுடன் திருமால் இருந்திடும் சோலையே...
செய்யுடன் திருமால் இருந்திடும் சோலையே....