Monday, February 28, 2011

சரஸ்வதி துதி!

(ஏதோ ஒரு சரஸ்வதி பூஜை அன்று ஒரு பன்னிரெண்டு வருடங்கள் முன்பு எழுதியது)

ராகம் : தேஷ் தாளம் : ஆதி
பல்லவி

அகலிடைச் சுடர் போல அறிவினைத் தூண்டும்,
சகல கலா வல்லி சரஸ்வதி ........
( அகலிடை..
அனுபல்லவி
புகலிடம் தெரியாமல் தவிக்கின்ற மாந்தருக்கு,
தகுமிடம் தந்து ஆதரிக்கும் தாய் நீயே.....
( அகலிடை..

அகத்தினில் இருக்கும் அழுக்கினைக் களைந்து,
ஜகத்து மனிதர்களின் பிணியினை நீக்கி,
முகத்தில் கண் போல ஒளிர்ந்திடும் அறிவினை,
ககன மழை போல் பொழிந்திடும் வாணி......
( அகலிடை...

Tuesday, February 1, 2011

காலகண்டர் துதி!!


( திருச்சி கருமண்டபம் அருகில் காலகண்டேஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த கோவில் பராமரிப்பு..பூஜை ..எல்லாவற்றையும் ரயில்வேயில் பணி ஓய்வு பெற்ற அன்பர் ஒருவர் (HE IS A COST ACCOUNTANT) வெகு ஸ்ரத்தையாய் செய்வார்.அந்த வயதிலும் அவர் இறையனாருக்கு பலம்,
தலம்,புஷ்பம் போல நாதானுபாசனையும் செய்ய வேண்டும் என்கிற அவாவில் ஃப்ளூட் கற்றுக் கொண்டார் என்பது கூடுதல் செய்தி)

ராகம் : ரீத கெளளை தாளம் : ஆதி

பல்லவி

பாரா முகம் ஏனய்யா.....பகதனிடம்
.....பாரா
அனுபல்லவி

தீராத வினை யாவும் தீர்ப்பவனே தீந்தமிழால்,
நின்னை நான் பாட வந்தேன்......
......பாரா

சரணம்

உருகாமல் பஜிப்பவருக்கு கருங்கல்லாக நிற்பவனே,
கசிந்துன்னை வேண்டுகிறோம், காலகண்டா காத்தருள்வாய்...

......பாரா